ஆருத்திரா தரிசனம் - History of Aarudra Darshan
பிறப்பே
எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?
ஓம்
நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஸ்ரீ
நடராஜர் ஆருத்ரா தரிசனம் நாளைமறுநாள் டிச.27-ம் தேதி புதன்கிழமை
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஓம் நமசிவாய
ஓம்
நமசிவாய ஓம் நமசிவாய பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு
உரிய
நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?
ஆருத்ரா
தரிசனம் என்றால் என்ன?
பிறப்பே
எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு
உரிய
நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?
ஆர்த்ரா
= திருவாதிரை
ஆஸ்லேஷா
= ஆயில்யம்
அனுராதா
= அனுஷம்
ஜேஷ்டா
= கேட்டை
தனிஷ்டா
= அவிட்டம்
புனர்வஸு
= புனர் பூசம்
பூர்வ
பல்குனி = பூரம்
உத்திர
பல்குனி = உத்திரம்
பூர்வா
ஷாடா = பூராடம்
பூர்வ
பத்ரா = பூரட்டாதி
உத்ர
பத்ரா = உத்திரட்டாதி
இவைகள்
எல்லாம் தமிழ் நட்சத்திரங்களுக்கு சொல்லப்படும் வட மொழிப் பெயர்களாகும்.
தமிழ்
மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.
மார்கழி
மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
ராமனுக்கு
ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்;
பரதனுக்கு
– பூசம்;
லட்சுமணனுக்கு
-ஆயில்யம்;
சத்ருக்னனுக்கு-
மகம்;
கிருஷ்ணனுக்கு
– ரோகிணி;
முருகனுக்கு
– விசாகம்.
இவையாவும்
இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.
ஆனால்
பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?
பிறவா
யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று
சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ
பெருமானைக் குறிக்கிறது.
சிவபெருமானின்
நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சேந்தனார்
வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
ஒரு
காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்
ஆனால்
திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.
திரேதாயுகா
அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.
அப்போது
கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
அதன்பின்
பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்
இந்த
நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
சேந்தனாருக்கும்
திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.
ஆருத்ரா
தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்
சிவபெருமான்
நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி
தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று
அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும். திருஉத்திரகோசமங்கை
மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மற்றும் பல சிவன் கோவிலிகளில்
ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக இருக்கும்…
சிதம்பரம்
நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்: டிச.26-ல் தேர் திருவிழா
கடலூர்:
உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா டிச.18 நடந்தது. வருகின்ற 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை
தேர் திருவிழாவும், வருகின்ற 27-ம் தேதி புதன்கிழமை
மார்கழி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.
சைவத்
திருத்தலங்களில் முதன்மையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் மேளதாளங்கள் முழங்க தேவாரம் திருவாசகம் ஓதிட வேத மந்திரங்கள் முழங்கிட கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக
கொடியேற்றத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து டிச.19 சுவாமிகள்
வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா, டிச.20-ம் தேதி தங்க
சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, டிச.21-ம் தேதி வெள்ளி
பூத வாகனத்தில் வீதி உலா, டிச.22-ம் தேதி வெள்ளி
ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், டிச.23-ம் தேதி வெள்ளி
யானை வாகன வீதி உலாவும், டிச.24-ம் தேதி தங்க
கைலாச வாகன வீதி உலாவும் நடைபெற்றது டிச.25-ம் தேதி தங்க
ரதத்தில் பிச்சாடனார் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. டிச.26-ம் தேதி செவ்வாய்க்கிழமை
தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
டிச.27-ம் தேதி புதன்கிழமை
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. டிச.28-ம் தேதி வியாழக்கிழமை
பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.
ஓம்
நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Comments
Post a Comment